Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

சுற்றுலா சென்று திரும்பிய புலம்பெயர் யாழ்.பெண்ணுக்கு கனடாவில் காத்திருந்த அதிர்ச்சி!

கனடாவில் வாழும் ஈழத்தமிழரான பெண்ணொருவரரின் வீட்டில் திருடுவதற்காக சென்ற கொள்ளையர் குழு அங்கு எதுவும் கிடைக்காததால் செய்த மோசமான செயலால் அப...

கனடாவில் வாழும் ஈழத்தமிழரான பெண்ணொருவரரின் வீட்டில் திருடுவதற்காக சென்ற கொள்ளையர் குழு அங்கு எதுவும் கிடைக்காததால் செய்த மோசமான செயலால் அப்பெண் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

கனடாவில் உள்ள மாகாணமொன்றில் வசிக்கும் ஈழத்தமிழரான சுகந்தி என்ற பெண் சுற்றுலாவுக்காக ஐந்துநாள் பயணமாக சென்றுள்ளார். இதன்போது வீட்டில் எவரும் இல்லையென்பதை அறிந்த கொள்ளையர்குழு தமது கைவரிசையை காட்ட முற்பட்டுள்ளது. வீட்டுக்குள் புகுந்து தங்கநகைள் மற்றும் பெறுமதியான பொருட்களை சல்லடை போட்டு தேடியுள்ளது.

எனினும் அந்த வீட்டிலிருந்து எவையும் கிடைக்காத நிலையில் ஆத்திரம்கொண்ட கொள்ளையர்குழு மலசலகூடம் கழுவ பயன்படுத்தும் திரவத்தை எடுத்துவந்து குறித்தபெண் அணியும் சேலைகள் மற்றும் வீடு முழுவதும் தெளித்து தமது ஆத்திரத்தை தீர்த்துள்ளனர்.

இந்தநிலையில் சுற்றுலா முடிந்து வீடுவந்த பெண் வீட்டில் இவ்வாறான செயற்பாடுகள் நடைபெற்றிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார் இது தொடர்பாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டநிலையில் அவர்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Latest Articles