ஜம்மு காஷ்மீரின் கத்துவா பகுதியில் நடத்தப்பட்ட வாகன சோதனையில், பயங்கர ஆயுதங்களும், வெடிபொருட்களும் நிரப்பப்பட்ட லாரி பிடிபட்டுள்ளது...
ஜம்மு காஷ்மீரின் கத்துவா பகுதியில் நடத்தப்பட்ட வாகன சோதனையில், பயங்கர ஆயுதங்களும், வெடிபொருட்களும் நிரப்பப்பட்ட லாரி பிடிபட்டுள்ளது. பிடிப்பட்ட லாரியானது புல்வாமா பகுதியில் பதிவு செய்யப்பட்டது என்பதும் அது சுஹில் அகமது என்பவருக்குச் சொந்தமானது என்பது தெரிய வந்துள்ளது.
லாரியை கத்துவா காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்ற போலீசார், 3 தீவிரவாதிகளையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு,
பாகிஸ்தானும், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாத அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
ஜம்மு காஷ்மீரில் பதற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டு வருவதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ள நிலையில், ஆயுதங்களும், வெடிபொருட்களும் நிரப்பப்பட்ட இந்த வாகனம் பிடிபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



No comments