தீவு ஒன்றிற்கு செல்ல முற்பட்ட இலங்கையர்கள் ஏழு பேர் கைது! சட்டவிரோதமான முறையில் ரியூனியன் தீவிற்கு செல்ல முற்பட்ட இலங்கையர்கள் ஏழு பே...
தீவு ஒன்றிற்கு செல்ல முற்பட்ட இலங்கையர்கள் ஏழு பேர் கைது!
சட்டவிரோதமான முறையில் ரியூனியன் தீவிற்கு செல்ல முற்பட்ட இலங்கையர்கள் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த ஏழு பேரும் இலங்கையில் பதிவு செய்யப்பட்ட மீன் பிடி படகு ஒன்றின் மூலம் ரியூனியன் தீவிற்கு செல்ல முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படகு “ரோஷன்” என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் ரியூனியன் கடற்பரப்பில் நுழைந்த போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னதாக இந்த மாதத்தின் ஆரம்பத்தில் இலங்கையை சேர்ந்த குழுவினர் படகு மூலம் சென்று ரியூனியன் தீவில் புகலிடம் கோரியிருந்தனர்.
இதேவேளை, அவுஸ்திரேலியாவில் எல்லை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இலங்கை அகதிகள் பலர் ரியூனியன் தீவை இலக்கு வைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்



No comments