Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

ஆட்சி கிடைத்தவுடன் வெடிகாெழுத்தி காெண்டாடிய கூட்டம்; தற்போது மிளகாய்த்தூள் தூள் தெளிக்கிறது!நாடாளுமன்றில் கண்ணீர் விட்டு அழுத உறுப்பினர்!

சிறிலங்கா நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற குழப்ப நிலைகள் மற்றும் அடாவடித் தனங்களில் சிக்கி பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக எமது  செய்தியாளர் கூ...


சிறிலங்கா நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற குழப்ப நிலைகள் மற்றும் அடாவடித் தனங்களில் சிக்கி பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக எமது  செய்தியாளர் கூறுகின்றார்.

கதிரைகளால் எறிந்தும் புத்தக ஆவணங்களால் எறிந்தும் மிளகாய்த் தூள் விசிறியும் இந்த வன்முறைகள் மஹிந்த தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலால் சில உத்தியோகத்தர்கள் சிகிச்சை பெற்றுள்ளதுடன் ஜே.வி.பி உறுப்பினர் விஜித ஹேரத் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்.

இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான காமினி ஜெயவிக்கிரம பெரேரா மிளகாய்த் தூள் தாக்குதலுக்கு உள்ளானதுடன் அதுகுறித்து கண்ணீருடன் பேட்டியளித்துள்ளார்.

“மிளகாய்த் தூளை என் மீது வீசியவர்களை என்ன செய்வீர்கள் ஜனாதிபதி? இது தான் உங்கள் ஜனநாயகமா?” என்று அவர் உருகமாக கேட்டுள்ளார்.


No comments

Latest Articles