Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

மதம் மாறச்சொல்லி அழுத்தம் கொடுத்ததால் உயிரை மாய்த்துக்கொண்ட தமிழ் மாணவன்?!

இரத்தினபுரி - இறக்குவானை பகுதியிலுள்ள தமிழ் பாடசாலையொன்றின் மாணவன் ஒருவன் துக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள...



இரத்தினபுரி - இறக்குவானை பகுதியிலுள்ள தமிழ் பாடசாலையொன்றின் மாணவன் ஒருவன் துக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுனின் சடலம் நேற்று மாலை அவரது வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. 13 வயதான மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நிதி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சையே இந்த உயிரிழப்பிற்கான காரணமாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிடுகின்றனர்.

எனினும், மத மாற்றம் தொடர்பில் குறித்த சிறுவனுக்கு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்துள்ளதாகவும், இந்த பிரச்சனையே மாணவனின் உயிரிழப்பிற்கான காரணம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எவ்வாறாயினும், குறித்த மாணவனின் உயிரிழப்புக்கான சரியான காரணம் தெரியவராத நிலையில், சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

ليست هناك تعليقات

Latest Articles