யாழ்ப்பாணத்தில் மாணவி ஒருவருக்கு நேர்ந்த பாலியல் துஷ்பிரயோகத்தை மறைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அதிபர் மற்றும் இரண்டு ஆசிரியர்க...
யாழ்ப்பாணத்தில் மாணவி ஒருவருக்கு நேர்ந்த பாலியல் துஷ்பிரயோகத்தை மறைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அதிபர் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் மூன்று ஆண்டுகளின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது மூன்று பேரும் குற்றமற்றவர்கள் என்று யாழ்ப்பாணம் நீதிவான் மன்றால் விடுவிக்கப்பட்டனர்.
யாழ்ப்பாணத்தை அண்மித்துள்ள பாடசாலை ஒன்றில் தரம் 8 இல் கல்வி பயின்ற மாணவி ஒருவருக்கு அந்தப் பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரால் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பில் அதே பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் மாணவியின் வீட்டுக்குச் சென்று சம்பவத்தை வெளியில் கூறவேண்டாம் என்று மிரட்டினார் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்தச் சம்பவம் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இடம்பெற்றது. சம்பவத்துடன் தொடர்புடையவர் என்று குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



No comments