கடல் நீர்மட்டம் மிக வேகமாக உயர்ந்து வருவதால் பல நகரங்கள் கடல் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இ...
கடல் நீர்மட்டம் மிக வேகமாக உயர்ந்து வருவதால் பல நகரங்கள் கடல் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இதற்கு க்ரீன்லாண்ட் மற்றும் அண்டார்டிகா விரைவாக உயர்வதுதான் காரணம் என்றும் விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
2100ஆம் ஆண்டு கடல் மட்டம் ஒரு மீட்டருக்கும் குறைவான அளவே உயரும் என்று ஏற்கனவே கூறப்பட்ட நிலையில் அதைவிட இரண்டு மடங்கு உயரும் என்று இப்போது ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இப்படி கடல் நீர் நிலப்பகுதியில் உட்புகும்போது லண்டன், நியூயார்க், ஷாங்காய் போன்ற முக்கிய நகரங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகும்.
கடல் மட்டம் 1990 ஆம் ஆண்டு முதல் 2100 ஆம் ஆண்டுக்குள் 3.5 முதல் 34.6 அடி வரை உயர வாய்ப்புள்ளது எனவும் இதனால் கடலோர நிலத்தடி நீரின் உப்பு தன்மை அதிகரிக்கும், நிலங்கள் அழியும் ஆபத்துள்ளதாகவும் இதன் காரணமாக குஜராத்தில் உள்ள கம்பட் மற்றும் கட்ச், மும்பை மற்றும் கொங்கன் கடலோரம் மற்றும் தெற்கு கேரளாவின் பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட கூடிய இடங்களாக உள்ளது என்று குறிப்பிடப்படுகின்றது.
இந்த நிலையில் விஞ்ஞானிகள் எதிர்பார்த்ததை விட கடல் மட்ட உயர்வு இரண்டு மடங்கு வேகத்தில் உயர்ந்து வருகிறது என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.



ليست هناك تعليقات