Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

ஒசாமாவின் புத்தகத்தை வைத்திருந்தவர் கைது!

பயங்கரவாத செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்கிய சந்தேகத்தின் பேரில் கல்முனை, மருதமுனை பிரதேசத்தில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ...


பயங்கரவாத செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்கிய சந்தேகத்தின் பேரில் கல்முனை, மருதமுனை பிரதேசத்தில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அல்-கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனின் உருவப்படம் பொறிக்கப்பட்ட அவரது விரிவுரைகள் அடங்கிய புத்தகமும் இவரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

கல்முனை விசேட பொலிஸ் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றுக்கு அமைய நேற்று (செவ்வாய்க் கிழமை) இரவு குறித்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்தேகநபரிடமிருந்து சந்தேகத்திற்கிடமான இரு டீ.வீ.டீ. மற்றும் எம்.ஐ. வகை சிம்களை கொண்ட இரு கையடக்க தொலைப்பேசிகள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

No comments

Latest Articles