Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

இன்று யாழில் நடந்த கோர விபத்து; கடலில் பாய்ந்த கார்!

யாழ்பாணம் - தீவகம் பண்ணை வீதியில் இன்று மாலை இடம்பெற்ற கார் விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் இரண்டு பேர் படுகாயமடைந்த நிலையில் யா...


யாழ்பாணம் - தீவகம் பண்ணை வீதியில் இன்று மாலை இடம்பெற்ற கார் விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் இரண்டு பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து இன்று மாலை 5 மணியளவில் மண்டைதீவுச் சந்திக்கு அண்மையாக இடம்பெற்றது.

மூவரும் காரில் மண்கும்பான் சாட்டிக் கடற்கரைக்குச் சென்று திரும்பும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வேகக் கட்டுப்பாட்டையிழந்த கார், வீதியோரம் உள்ள கட்டைகளுடன் மோதுண்டு கடலுக்குள் பாய்ந்தது என பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டது.

சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் சாரதி உள்பட இருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.



No comments

Latest Articles