Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

முறுகண்டி இளைஞன் யாழில் கைது!

8 கிலோ கேரளா கஞ்சாவுடன் 23 வயது இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப் பட்டுள்ளார். முல்லைத்தீவு முறுகண்டி பகுதியைச் ச...


8 கிலோ கேரளா கஞ்சாவுடன் 23 வயது இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப் பட்டுள்ளார்.

முல்லைத்தீவு முறுகண்டி பகுதியைச் சேர்ந்த இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் அரியாலை பூம்புகார் பகுதியில் கேரளா கஞ்சாவை விற்பனைக்காக நேற்று (06) இரவு கொண்டு சென்ற வேளையில் யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் படி இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், யாழ். நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments

Latest Articles