தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வட மாகாணத்தை தமிழீழம் என பெயரிட்டு அவர்களுக்கே வழங்க வேண்டும் என கிழக்கு தேசம் விடுதலை இயக்கத்தின் செய...
தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வட மாகாணத்தை தமிழீழம் என பெயரிட்டு அவர்களுக்கே வழங்க வேண்டும் என கிழக்கு தேசம் விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம் வஃபா பாருக் தெரிவித்துள்ளார்.
சாய்ந்தமருதில் உள்ள அவரது இல்லத்தில் 19ஆம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
“ஈழம்” என்பது இலங்கைக்கு வழங்கப்படும் பெயர்களில் ஒன்றாகும். “ஈழம்” தமிழ் மக்களின் இன உணர்வோடு கலந்து உள்ளது.
அதே போல் முஸ்லிம் மக்கள் அதிகளவாக இருக்கும் கிழக்கு மாகாணத்தை “கிழக்கு தேசம்” என்ற பெயருடன் முஸ்லிம்களுக்கு வழங்க வேண்டும் எனவும் குறிப்பிடடுள்ளார்.
அதேபோல் மலையகத்தை இந்திய வம்சாவளியினருக்கு கொடுப்பது சிறந்தது எனவும் தெரிவித்துள்ளார்.



ليست هناك تعليقات