பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் ஜோர்ஜ் அலோசியஸ் உள்ளிட்ட நால்வர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளர். கொழ...
பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் ஜோர்ஜ் அலோசியஸ் உள்ளிட்ட நால்வர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளர்.
கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இவர்கள் ஆஜர்படுத்தப்பட்ட போது இந்த பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் முறிகள் ஏலத்தின் போது முறையற்ற விதத்தில் பணம் ஈட்டியமை தொடர்பில் கடந்த பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் கசுன் பாலிசேன ஆகியோர் கைது செய்யப்பட்டடிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments