Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

மன்னாரில் சிக்கிய எட்டு வர்த்தகர்கள் -அபராதமும் விதிப்பு!

மன்னார் பகுதியிலுள்ள சில கிராம பகுதிகளில் கடைகளை மன்னார் நுகர்வோர் பாதுகாப்பு சபை உத்தியோ கத்தர்கள் திடீர் பரிசோதனைகளை மேற்கொண்டபொழுத...



மன்னார் பகுதியிலுள்ள சில கிராம பகுதிகளில் கடைகளை மன்னார் நுகர்வோர் பாதுகாப்பு சபை உத்தியோ கத்தர்கள் திடீர் பரிசோதனைகளை மேற்கொண்டபொழுது எட்டு வர்த்தக நிலையங்கனில் விற்பனை செய்யப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டன.

பேசாலை, இலந்தமோட்டை, வங்காலை, முள்ளிக்குளம் மற்றும் மன்னார் நகர் ஆகிய இடங்களிலுள்ள வர்த்தக நிலையங்களை மன்னார் நுகர்வோர் பாதுகாப்பு சபை உத்தியோகத்தர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது அத்தாட்சிப்படுத்தப்படாத மின்சார பிளக், காலாவதியான பொடி லோசர், காலாவதியான வெள்ளைச் சீமெந்து,சம்பல் பைக்கற், கோப்பித் தூள் போன்ற பொருட்களை விற்ற வர்த்தகர்களே அகப்பட்டுக் கொண்டனர்.

இவர்களுக்கு எதிராக புதன் கிழமை (20.02.2019) மன்னார் மாவட்ட நுகர்வோர்

பாதுகாப்பு சபை உத்தியோகத்தர், மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றில் தனித்தனி வழக்கு தாக்கல் செய்து சந்தேக நபர்களை

நீதிமன்றில் ஆஜராக்கினார்.

மன்னார் நீதவான் ரி.சரவணராஜா முன்னிலையில் விசாரிக்கப்பட்ட இவ் வழக்கில்

எட்டுபேரும் தங்கள் குற்றங்களை ஏற்றுக் கொண்டனர்.

ஆதில் ஐந்து நபர்களுக்கு தலா 4500 ரூபா அபராதமும் மூன்று பேருக்கு தலா

6000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது.

ليست هناك تعليقات

Latest Articles