சிறி லங்கா நாடாளுமன்றத்தின் சபா நாயகர் கரு ஜெயசூரியவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் இன்று வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த...
சிறி லங்கா நாடாளுமன்றத்தின் சபா நாயகர் கரு ஜெயசூரியவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் இன்று வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்குத் தாக்கலினை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தொடுத்துள்ளார்.
சிறி லங்கா ஜனாதிபதிலாம் முன்னெடுக்கப்பட்ட தேர்தல் அறிவிப்பை உயர்நீதிமன்றம் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ள நிலையில் நாடாளுமன்ற சபை அமர்வுகளை சபாநாயகர் கூட்டியது தவறென சுட்டிக்காட்டியே இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இன்று பிற்பகல் ஒருமணிக்கு கூடிய நாடாளுமன்றம் எதிர்வரும் 23ஆம் திகதி வெள்ளிக்கிழமைவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.



No comments