கொழும்பு உட்பட புறநகர் பகுதிகளில் காவற்துறை அதிரடிபடையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்ட இரு பெண்கள் உட...
கொழும்பு உட்பட புறநகர் பகுதிகளில் காவற்துறை அதிரடிபடையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்ட இரு பெண்கள் உட்பட 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடவத்த - ஹொனஹேன பிரதேசத்தில் சிற்றூந்தில் ஹெரோயின் வியாபாரத்தினை மேற்கொண்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை பொரளை, கல்கிஸ்ஸ, மட்டக்குளிய, மொரட்டுவ மற்றும் மருதானை பிரதேசத்தில் ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள மேலும் 05 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.



ليست هناك تعليقات