இலங்கையில் தற்போது நிலவி வரும் மழையுடனான காலநிலையே எதிர்வரும் தினங்களிலும் எதிர்ப்பார்க்கப்படுவதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூ...
இலங்கையில் தற்போது நிலவி வரும் மழையுடனான காலநிலையே எதிர்வரும் தினங்களிலும் எதிர்ப்பார்க்கப்படுவதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
அதற்கமைய மத்திய, ஊவா, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பிரதேசங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமாக கடும் மழை பெய்யக்கூடும் என அந்த நிலையம் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேல், தென் மற்றும் வடமேல் கடலோர பிரதேசங்களில் காலை நேரத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
அதேபோல் , இடியுடன் கூடிய மழை பெய்யும் போது குறித்த பிரதேசங்களில் கடும் மின்னலுடன் மணிக்கு சுமார் 70 - 80 கிலோ மீற்றர் வேகத்தில் கடும் காற்று வீசக்கூடும் என வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.



No comments