கோரோனா வைரஸால் ஏற்படும் நிதி சிக்கல்களை சமாளிக்க அரச ஊழியர்களால் ஒருநாள் சம்பளத்தை வழங்கும் நடவடிக்கையில் முப்படைகள், பொலிஸ் மற்றும் சிவில் ...
கோரோனா வைரஸால் ஏற்படும் நிதி சிக்கல்களை சமாளிக்க அரச ஊழியர்களால் ஒருநாள் சம்பளத்தை வழங்கும் நடவடிக்கையில் முப்படைகள், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு பொருந்தாது என்று பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
கோரோனா வைரஸ் தொற்று நோயால் நாட்டில் ஏற்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக அரசு நிதி சிக்கல்களை எதிர்கொள்கிறது என்று கடந்த வாரம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பி.பீ.ஜெயசுந்தர அறிவித்தார்.
அரசு ஊழியர்களை தமது மே மாத சம்பளத்தை முழுமையாகவோ அல்லது பகுதியளவிலோ விதவைகள் மற்றும் அனாதைகளின் ஓய்வூதிய நிதியத்துக்கு வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.
இந்த வேண்டுகோளைத் தொடர்ந்து, அமைச்சுகள் அனைத்து நிறுவனத் தலைவர்களுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளதுடன், தற்போதைய நிதி சிக்கல்களை சமாளிக்க அவர்களின் ஊழியர்களின் மே சம்பளத்தின் ஒரு பகுதியை, அரை வாரம், ஒரு வாரம் அல்லது ஒரு நாளைக்கு நன்கொடையாக வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
இதன்படி முப்படைகள் மற்றும் பொலிஸாரிடமிருந்து ஒரு நாள் சம்பளத்தைக் கழிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது என்று சமூக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
அந்தக் கூற்றை நிராகரித்த மேஜர் ஜெனரல் குணரத்ன, இந்த கோரிக்கை முப்படைகள், மாலுமிகள், விமான வீரர்கள், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பொருந்தாது என்று குறிப்பிட்டுள்ளார்.



No comments