சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் பணம் செலுத்தி தனிமைப்படுத்திக்கொண்டவர்களில் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றி அறிகுறிகள் தென்பட்டுள்ளன. பாணந்துறை வாத்...
சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் பணம் செலுத்தி தனிமைப்படுத்திக்கொண்டவர்களில் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றி அறிகுறிகள் தென்பட்டுள்ளன.
பாணந்துறை வாத்துவையில் உள்ள சுற்றுலா ஹோட்டல் தங்கியிருந்தவர்களுக்கு PCR பரிசோதனைகள் நடத்தப்பட்டதுடன் அவர்களில் இருவருக்கு கொரோனா வைரஸ் நோய் அறிகுகள் இருப்பது இன்று கண்டறியப்பட்டதாக களுத்துறை வைத்தியசாலையின் மருத்துவர் கிறிஷான் ஹிரிமுத்துக்கொட தெரிவித்துள்ளார்.
38 வயதான ஆணுக்கும் 73 வயதான பெண்மணிக்கும் இவ்வாறு கொரோனா நோய் அறிகுறிகள் தென்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த இருவர் உட்பட 75 பேர் கடந்த 6 ஆம் திகதி ஐரோப்பாவில் இருந்து நாடு திரும்பிய நிலையில்,வாத்துவை வஸ்கடுவை பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதியில் பணம் செலுத்தி, தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக்கொண்டுள்ளனர்.
இவர்களுக்கு நேற்று PCR பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அவர்களிடம் பெறப்பட்ட மாதிரிகள் கராப்பிட்டிய வைத்தியசாலையில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.



No comments