கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் விளையாட்டு போட்டிகள் முடங்கியுள்ளன. இந்நிலையில், ஐரோப்பாவில் கொரோனா வைரஸின் தீவிரம் குறைந்து வர...
இந்நிலையில், ஐரோப்பாவில் கொரோனா வைரஸின் தீவிரம் குறைந்து வருவதை அடுத்து ஜெர்மனியில் முதல் முறையாக பிரபல கால்பந்து தொடரான புன்டஸ்லிகாவின் லீக் போட்டிகள் தொடங்கி உள்ளன.
இதில் பங்குபெறும் வீரர்களுக்கு அடிக்கடி கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், விடுதியில் இருந்து மைதானம் வரும் வரை கூட்டவிலக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
பொதுவாகரசிகர்களின் ஆர்ப்பரிப்பில் அதிரும் மைதானத்தில், ரசிகர்களே இல்லாமல் பல்வேறுகட்டுப்பாடுகளுடன் இந்த கால்பந்து தொடர் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.



No comments