ஸ்ரீலங்கா இராணுவத்தினரினால் படுகாலை செய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் செல்லத்துரை புருஷோத்தமனின் 10 ஆவது...
ஸ்ரீலங்கா இராணுவத்தினரினால் படுகாலை செய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் செல்லத்துரை புருஷோத்தமனின் 10 ஆவது ஆண்டு நினைவு தினம் நேற்று நினைவு கூறப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையிலேயே இந்த மாணவன் உயிரிழந்துள்ளமை குறிப்பிடதக்கது
கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் திகதி யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் செல்லத்துரை புருஷோத்தமன் ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவர் யாழ் பல்கலைகழகத்தில் கல்வி பயின்ற போது யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவராக செயற்பட்டதுடன் தமிழ் மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகளிலும் ஈடுபட்டார்.
இதன் காரணமாக ஸ்ரீலங்கா இராணவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட நிலையில் செல்லத்துரை புருஷோத்தமனின் 10 வது ஆண்டு நினைவு தினம் நேற்று யாழ் பல்கழலைக்கழகத்தில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
யாழ் பல்கலைகழகத்தில் கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் ரமேஸ்வரனால் மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன் கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் கிரிசாந்தனால் நினைவு சுடரும் ஏற்றி வைக்கப்பட்டது.
அதன் பின்னர் மாணவர்கள் விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள், மலர்தூவி தீபங்கள் ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.



No comments