நித்தகைக்குளம் உடைப்பால் காணமல்போனவர்கள் உலங்குவானூர்தியின் உதவியுடன், மீட்கப்பட்டனர். முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேச செயல...
நித்தகைக்குளம் உடைப்பால் காணமல்போனவர்கள் உலங்குவானூர்தியின் உதவியுடன், மீட்கப்பட்டனர்.
முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட, ஆண்டான் குளம் பகுதிக்கு அடுத்துள்ள நித்தகைக்குளம் நேற்று முன்தினம் உடைப்பெடுத்திருந்தது.
இதனால் பல நூற்றுக்கணக்கான பயிர் நிலங்கள் சேதமடைந்திருந்ததுடன், ஆறு பேர் காணமல்போயிருந்தனர்.
மேலும் அனர்த்த முகாமைத்துவக் குழுவினர், முப்படையினர், காவற்றுறையினர் மற்றும் ஊர் மக்கள் என அனைவரும் இணைந்து காணாமல் போன குடும்பத்தை தேடுதல் மேற்கொண்டனர்.
இந் நிலையில் காணாமல் போயிருந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் மற்றும் ஏனைய மூன்றுபேரும் இன்று காலை 07.00 மணியளவில் உலங்கு வானூர்தியின் உதவியுடன் மீட்கப்பட்டனர்.
இவ்வாறு மீட்கப்பட்டவர்கள் வைத்திய பரிசோதனைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.




No comments