உலகமெங்கும் வாழும் தமிழர்களால் திருக்கார்த்திகை விளக்கீடு வெகுவிமர்சையாக இடம்பெற்று வருகிறது. அந்தவகையில் யாழ். குடாநாடு உட்பட்ட இ...
உலகமெங்கும் வாழும் தமிழர்களால் திருக்கார்த்திகை விளக்கீடு வெகுவிமர்சையாக இடம்பெற்று வருகிறது.
அந்தவகையில் யாழ். குடாநாடு உட்பட்ட இலங்கையில் தமிழர்கள் வாழும் அனைத்துப்பகுதிகளிலும் இன்று வியாழக்கிழமை (22.11.2018) திருக்கார்த்திகை விளக்கீடு வெகுவிமர்சையாக இடம்பெற்றது.
இந்து ஆலயங்களிலும் பெரும்பாலான இல்லங்களிலும் தீபங்கள் ஏற்றியதுடன் அடியவர்கள் சொக்கப்பானை ஏற்றியும் வழிபட்டனர்.
கடந்த கால யுத்தத்தின் பின்னரான காலங்களில் இருந்து கடந்த வருடம்வரை ஈழத்து தமிழர்கள் திருக்கார்த்திகை விளக்கீட்டை பெரிதாக வரவேற்காத நிலையில் இம்முறை வெகு விமர்சையாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.





No comments