முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச புதிய பிரதமராக பதவியேற்றுள்ளதை அடுத்து கொழும்பு, விஜேராமவில் இருக்கும் அவரது வீட்டை சுற்றி மக்கள்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச புதிய பிரதமராக பதவியேற்றுள்ளதை அடுத்து கொழும்பு, விஜேராமவில் இருக்கும் அவரது வீட்டை சுற்றி மக்கள் அதிகளவில் குவிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகிந்தவின் வெற்றியை கொண்டாடுவதற்கே அவரின் ஆதரவாளர்கள் வீட்டை சுற்றிவளைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த இடத்தில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதேவேளை, இந்த வெற்றியை யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் கொழும்பு ஆதரவாளர்களும் வெடி கொழுத்தி கொண்டாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



No comments