Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

இராணுவத்தினர்; நிர்மாணித்த வீடு பயனாளியிடம் கையளிப்பு

  யாழ்ப்பாணம் வடமராட்சி பூவற்கரையில், ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் ரவி ரட்ணசிங்கம் ஒருங்கிணைப்பில் சீலா இமானுவேலின் நிதி அனுசரணையில் 551 ...

 யாழ்ப்பாணம் வடமராட்சி பூவற்கரையில், ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் ரவி ரட்ணசிங்கம் ஒருங்கிணைப்பில் சீலா இமானுவேலின் நிதி அனுசரணையில் 551 வது காலால் படை பிரிவின் ஆளணியால் நிர்மாணிக்கப்பட்ட வீடு பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.


55வது காலால் படை பிரிவு படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரத்னவின் அழைப்பின் பெயரில்,யாழ் பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி ஜெனரல் சந்தன விஜேசுந்தர பிரதம விருந்தினராக கலந்து கொண்டு வீட்டை நிதி அனுசரணையாளர் சீலா மானுவேலுடன் இணைந்து பயனாளியிடம் கையளித்தார்.



551 வது படையணி பிரிகேடியர் சிந்திக்க, வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் ஆழ்வாப்பிள்ளை சிறி, வடமராட்சி உதவி பொலிஸ் அத்தியட்சகர் சுஜீவ இத்துமால் உட்பட பலரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.




ليست هناك تعليقات

Latest Articles