ரத்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புகையிரத கடவையில் புகையிரதத்துடன் மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (08) காலை 6.15 மணியளவில் இ...
ரத்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புகையிரத கடவையில் புகையிரதத்துடன் மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (08) காலை 6.15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மாத்தறையில் இருந்து மருதானை நோக்கி பயணித்த புகையிரத்தில் மோதியே குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.
84 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் ரத்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



ليست هناك تعليقات