யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இருந்து நேற்று இரவு கடல் தொழிலுக்குச் சென்ற படகு மின்னல் தாக்கத்தினால் எரிந்து கடலுக்குள் மூழ்கிய ...
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இருந்து நேற்று இரவு கடல் தொழிலுக்குச் சென்ற படகு மின்னல் தாக்கத்தினால் எரிந்து கடலுக்குள் மூழ்கிய அதேவேளை படகில் இருந்த
மூன்று தொழிலாளர்களும் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.
நேற்று மாலை குருநகர் பகுதியில் இருந்து கடல் தொழிலுக்குச் சென்ற குறித்த படகுநேற்று இரவு 11 30 மணியளவில் நெடுந்தீவு கடற்பரப்பிலேயே மின்னல் தாக்கத்துக்கு உள்ளான நிலையில் எரிந்து மூழ்கியுள்ளது.
குறித்த படகில் குருநகர் பகுதியை சேர்ந்த 3 பேர் தொழிலுக்குச் சென்ற நிலையில் மூன்று பேரும் கடலில் தூக்கி வீசப்பட்டு அருகில் தொழிலில் ஈடுபட்டிருந்த மற்றுமொரு மீன்பிடி படகில் இருந்தவர்களால் காப்பாற்றப்பட்டனர். குறித்த படகு 15 இலட்சம் ரூபா பெறுமதியானதென படகின் உரிமையாளர் தெரிவித்தார்.



No comments